2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சினிமா ஹீரோக்களிடம் நீங்கள் ஏன் உதவி செய்யவில்லை என்று கேட்பது அறியாமை

A.K.M. Ramzy   / 2020 ஏப்ரல் 21 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் உருவாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கொவிட்-19 வைரஸ், தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது., இந்தியாவில் 

கொவிட்-19  வைரஸ் பாதிப்பை மத்திய அரசு பேரிடராக அறிவித்தது.  இந்த நிலையில் கொவிட்-19  மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட் டுள்ளது. மக்களுக்கு உதவும் வகையில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் மத்திய மற்றும் மாநில

அரசுகளுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள் உதவி செய்வது பற்றி எஸ்.வி.சேகர் கருத்து ஒன்றை தனது

டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "சினிமாவில் வில்லனாக

நடிப்பவர்களிடம் வாழ்க்கையிலும் கொலை, கொள்ளை , கற்பழிப்பு ஏன் செய்வதில்லை என்று கேட்கிறோமா? அது போல ஹீரோக்களிடமும் நீங்க ஏன்

இதுக்கு உதவலை அதுக்கு உதவலை என்று கேட்பதும் ஒருவித அறியாமை" என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .