2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நான் எல்லை மீறுவேன்.. ஸ்ரீரெட்டியால் மிரளும் ரசிகர்கள்!

Editorial   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கும் பதிவால் ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

நடிகை ஸ்ரீரெட்டி நடிப்பில் இதுவரை எந்த சினிமாவும் வெளியாகவில்லை. தற்போதுதான் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

எனினும், திரைத்துறையினர் குறித்து அவர் கூறிய குற்றச்சாட்டால் பெரும் பிரபலமானார். பட வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ்திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் தன்னை படுக்கைக்கு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.

அவர் கூறிய இந்த குற்றச்சாட்டால் பிரபல நடிகைகளுக்கு சமமாக பிரபலமானார். தொடர்ந்து தனது முகநூல் பக்கத்தில் பிரபலங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.

தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு தலைப்புச் செய்தியாகி வருகிறார். நாள்தோறும் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு பதிவை வெளியிட்டு வருகிறார்.

ஸ்ரீரெட்டி போடும் பதிவுகள் மற்றும் போட்டோக்களை ரசிக்கவே ஒரு கூட்டம் உள்ளது. நாள்தோறும் ஸ்ரீரெட்டி என்ன போட்டோ போடுவார் என காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

அந்த வகையில் ஸ்ரீரெட்டி இன்று பதிவிட்டுள்ள பதவினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதாவது நல்ல விஷயங்கள் என்னை எல்லை மீறச் சொல்லும் போது நான் எல்லை மீறுவேன் என தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை பாராட்டி வருகின்றனர். மேலும் இதுபோன்று தைரியமாகவும் இருங்கள் என தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .