2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பூஜாவின் மனநிறைவு

Editorial   / 2020 ஜூன் 22 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா ஊரடங்கில் பல நடிகைகள் சமையலறையே கதி என்றிருக்கிறார்கள். வகை வகையாக சமைத்து  அதன் படங்களை வலைதளங்களில் வெளியிடுகின்றனர்.

அண்மையில், ‘சமந்தா ஒன்றும் அவ்வளவு அழகு இல்லை” என்று தெரிவித்து அவரது ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட பூஜா ஹெக்டே, தனது வீட்டில் உள்ளவர்களுக்கு தானே சமைத்துப் பரிமாறியதை பெருமையாகச் சொல்லி இருக்கிறார்.

“எல்லோருக்கும் மகிழ்ச்சி முக்கியம். அத்துடன் மனநிறைவும் முக்கியம். இந்த கொரோனா ஊரடங்கில் தனிமைப்படுத்தலில் அனைவருமே இருக்கிறோம். உங்களுக்கு என்ன மகிழ்ச்சி தந்தது.

எனது மகிழ்ச்சியை நான் தெரிவு செய்தேன். என் குடும்பத்தினருக்குச் சமைப்பது தவிர வேறு எதுவும் மகிழ்ச்சியாகத் தெரியவில்லை. இது மகிழ்ச்சி மட்டுமல்ல ஏற்கனவே குறிப்பிட்டது போல் மனநிறைவும் ஆகும்” என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X