2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மீண்டும் இணையவுள்ள மெர்சல் கூட்டணி

Editorial   / 2020 மே 07 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்பட்த்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இந்த நிலையில், விஜய் - தேனாண்டாள் ஃபிலிம்ஸ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தேனாண்டாள் ஃபிலிம்ஸைச் சேர்ந்த முரளி ராமசாமி தகவல் வெளியிட்டுள்ளார்.

“மெர்சல் படம் எங்களுக்கு இலாபத்தை அளித்தது. அது தோல்விப் படமல்ல. படம் வெளியாகும் போது சூழல் சரியாக இல்லை. விஜய்யுடன் எனக்கு நல்ல புரிதல் உண்டு. அண்மையில் விஜய்யுடன் பேசினேன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு அடுத்ததாக இருவரும் இணையும் படம் பற்றி பேசலாம் எனக் கூறினார்” என்றார்.

இதேவேளை, மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .