2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீரா மிதுன் காட்டம்

Editorial   / 2020 ஜூன் 19 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டி தற்கொலை இந்திய திரையுலகையே உலுக்கியுள்ளது. அங்கு நடக்கும் அடக்குமுறைகள் பற்றி பல்வேறு தரப்பினரும் பேச தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகை மீரா மிதுன், கோலிவுட்டை கடுமையாக விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "பொலிவுட்டை பற்றி கோலிவுட்காரர்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. உண்மையில் கோலிவுட் தான் மிக மோசமான இடம். இங்கு தான் நெபோடிசன் அதிகமாக இருக்கிறது.

வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வதும் அதிகம் நடக்கிறது. என்னை போன்ற பெண்கள் சாதிப்பதை விரும்பாத, வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு துன்பங்களை அள்ளித்தரும் ஆணாதிக்கவாதிகள் இங்கு தான் நிறைந்திருக்கிறார்கள்", என மீரா மிதுன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அண்மையில், சுஷாந்த் சிங் மரணம் குறித்து மீரா மிதுன் மிக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சுஷாந்த் இடத்தில் தான் கடந்த ஆண்டு தான் இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .