2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாடகைத் தாய்; ஷில்பா விளக்கம்

Editorial   / 2020 மே 15 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை  ஷில்பா ஷெட்டி 2009ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2012ஆம் ஆண்டில் இவர்களுக்கு வியான் ராஜ் குந்த்ரா என்கிற மகன் பிறந்தான்.

44 வயதான ஷில்பா ஷெட்டி, 2ஆவதாக வாடகைத் தாய் முறை மூலம் பெண் குழந்தை பிறந்தது. பெப்ரவரி 15 அன்று பிறந்த இந்தக் குழந்தைக்கு சமிஷா என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலையில், “எனக்குப் பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. வியான் பிறந்த பிறகு இன்னொரு குழந்தை வேண்டும் என விரும்பினேன். பிறகு, ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்பினேன். அதிலும் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டது.

உடல்நலக் குறைபாட்டால் பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டது. இதில் பிரச்னை இருப்பது தெரிந்ததால் வாடகைத் தாய் முறை மூலம் 2-வது குழந்தையைப் பெற்றெடுத்தேன். இதிலும் மூன்று முறை தோல்வி ஏற்பட்டது. இதன்பிறகே எங்களுக்கு சமிஷா கிடைத்தாள்” என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X