2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வேற லெவல்லபோய்க்கிட்டு இருக்கோம்: சாண்டியிடம் பிரியங்கா

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்னும் மூன்று நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் இந்த வாரம் முழுவதும் சிறப்பு விருந்தினர் வாரமாக உள்ளது. 

ஏற்கெனவே சிறப்பு விருந்தினர்களாக வீட்டிற்குள் வந்துள்ள வனிதா, சேரன், அபிராமி, சாக்சி, கஸ்தூரி ஆகியோர் உள்பட ஒருசிலர் வந்த நிலையில் இன்றும் மேலும் சில விருந்தினர்கள் வந்துள்ளதால் பிக்பாஸ் வீடே கலகலப்பாகியுள்ளது.

இன்று பிக்பாஸ் இரண்டாம் சீசனின் போட்டியாளர் பாலாஜி, விஜய் டிவியின் பிரியங்கா, உள்பட ஒருசிலர் பிக்பாஸ் வீட்டின் விருந்தினர்களாக வருகை தந்துள்ளனர்.

புதிய விருந்தினர்களை பிக்பாஸ் சீசன் 3 இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற லொஸ்லியா, சாண்டி,  முகின், ஷெரின் ஆகிய நால்வரும் ஏற்கெனவே சிறப்பு விருந்தினர்களாக இருப்பவர்களும் சிறப்பாக வரவேற்கின்றனர்.

இன்று வந்த விருதினர்கள் அனைவரும் சாண்டிக்கு அதிகமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரியங்கா சாண்டியிடம், ‘சூப்பர் முடிவு எடுத்து வேற லெவல்ல நாம போயிகிட்டு இருக்கோம்’ என்று கூறியதை சாண்டி ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X