2024 மார்ச் 28, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

Editorial   / 2019 ஜனவரி 01 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு- ஜெம்பட்டா வீதி கரையோரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதன் போது காயமடைந்த 37 வயதுடைய நபர் கொழும்ப தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கரையோரப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X