2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நியூசிலாந்து செல்ல முற்பட்ட மூவர் கைது

Editorial   / 2017 நவம்பர் 29 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக படகு மூலம் நியூசிலாந்து செல்ல முற்பட்ட 3 பேர் உடப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 

உடப்பு-செல்வபுரம் பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் சிலர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இன்று (29) அதிகாலை 2.45 மணியளவில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் உடப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்,இவர்கள் 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (29) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X