2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பேஸ்புக் மூலம் பொலிஸாரை அவமதித்த இளைஞன் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக் ஊடாக பிட்டிகல பொலிஸாரை அவமதித்த இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் போலி பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி, தேவையற்ற சொற் பிரயோகங்களால் பொலிஸாரை  அவமதிக்கும் வகையில் பதிவுகளை இட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வெ​ய்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த  20 வயதுடைய இளைஞன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வீதியில் சென்ற குறித்த இளைஞரை ஏ​தோ ஒரு குற்றச் செயலுக்காகக் கைதுசெய்திருந்ததுடன்,  பிறகு அவரது அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலையான குறித்த இளைஞன் பேஸ்புக் ஊடாக பொலிஸாரை அவமதிக்கும் பதிவுகளை பதிவிட்டதால் பிட்டிகல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X