2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

6 இலட்ச ரூபாய் கொள்ளை-6 ​பேர் கைது

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 07 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரனையிலுள்ள பேக்கரி ஒன்றுக்கு சொந்தமான லொறியை கடந்த 4ஆம் திகதி  அருகில் வழிமறித்து 6 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 6 ​பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வௌ்ளிக்கிழமை நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் ஹொரனை நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் காலி, மஹகம மற்றும் புளத்சிங்கள பகுதி​களைச் சேர்ந்த 20,21,22, 27 மற்றும் 50 வயதானவர்களென  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் (6) நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, இவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை வி​ளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .