2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆயுதங்களுடன் பெண் கைது

Editorial   / 2018 ஜூலை 09 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, ஊருகஸ்மங்ஹன்திய பிரதேசத்தில் வைத்து, துப்பாக்கி ரவைகள் மற்றும் பல ஆயுதங்களுடன், பெண்ணொருவரைக் கைது செய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஊருகஸ்மங்ஹன்திய, கொஹிலவகுர பிரதேச வீடொன்றைச் சோதனையிட்ட போது, போரா ரக துப்பாக்கி ரவைகள் 09, 122 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி ரவைகள் 134 உட்பட மேலும் பல ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே, அவ்வீட்டிலிருந்த பெண், கைது செய்யப்பட்டாரென, பொலிஸார் கூறினர்.

அத்துடன், அவ்வீட்டிலிருந்து கத்திகள், வாள்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸால், கைது செய்யப்பட்ட 27 வயதுடைய பெண்ணை, எல்விட்டிய ​நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக, மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .