2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உரப்பையில் யுவதியின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஹெலியகொட, பலிகல்லப் பிரதேசத்தில் 24 வயதுடைய யுவதியின் சடலம், உரப்பையொன்றில் நேற்று சனிக்கிழமை (13) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவசர சேவைப் பிரிவு இலக்கமான 119 அழைப்புக்குக் கிடைத்த தகவலையடுத்து எஹெலியகொடப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர், திகனப் பிரதேசத்தைச் சேர்ந்த ரங்கா ஜயசிங்க என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனை இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெறவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எஹெலியகொடப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .