2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கத்திக்குத்தில் இருவர் பலி; இருவர் காயம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், இனந்தெரியாத நபர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரவு 9 மணியளவில் கத்திக்குத்துக்குள்ளாகியுள்ளதாக அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

கத்திக்குத்துக்குள்ளானவர்களில், தந்தையும் இளைய மகனும் உயிரிழந்துள்ளதுடன், தாயும் மூத்த மகனும் கடும் காயங்களுக்குள்ளான நிலையில், அங்குணுகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், தங்கல்லை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நால்வரும், தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பித்துச் சென்றுள்ள நிலையில் அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X