2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கதிர்காமத்தில் துப்பாக்கிச்சூடு

Editorial   / 2019 ஜூலை 26 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளியாபிட்டிய - கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்றில், இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளியாபிட்டிய, அலெப்பதெனிய பிரதேசத்துக்கு, வான் ஒன்றில் வந்த சிலர், ​அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனல்.

சம்பவத்தில் காயமடைந்தவர், குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இவர், 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கதிர்காமம் - யால காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான மாணிக்கக்கல் அகழ்ந்தவர்களுக்கும் வனவளப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .