2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கைது

Editorial   / 2017 நவம்பர் 26 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேர் புத்தளம்  பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரிகளால்  இன்று(26)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம்,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம்-தில்அடிய பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் சந்தேகத்திடற்கிடமான நபர்கள் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலக்கமையவே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் பெண்ணொருவரும் இருந்ததாக சிலர் தெரிவித்ததாகவும்,குறித்த சந்தர்ப்பத்தில் அவர் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .