2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொலைச் சம்பவம் தொடர்பில் ஆராய பொலிஸ் குழுக்கள் நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 15 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளை – ஹேகித்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக, பொலிஸ் குழுவினர் நான்கு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வத்தளை பொலிஸ், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், பேலியகொடை விசேட விசா​ரணை பிரிவினர் மற்றும் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ​கொலைச் சம்பவம் தொடர்பில் டி – 56 ரக துப்பாக்கி உபயோகிக்கப்பட்டுள்ளதாகவும், “பும்மா” எனப்படும் பாதாள குழுவின் உறுப்பினர் ஒருவராலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .