2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சடலம் மீட்பு

Yuganthini   / 2017 ஜூலை 17 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீரக்கெட்டிய, பஸ்மங்ஹந்திய பகுதியில் வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட நபர் ஒருவரின் சடலத்தை  இன்று (17)  வீரக்கெட்டிய பொலிஸார் மீட்டுள்ளனர்

சம்பவத்தில் உயிரிழந்த நபர் தங்கல்லை, பஹலகொட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ரவிந்து நிமசர காரியவன்ச என, பொலிஸாரின் மேலதிக விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

இப்பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் காரணமாக  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில்  இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வீரக்கெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .