2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சஹ்ரானிடம் பயிற்சிப் பெற்ற இருவர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாஅத்தே மில்லத் இப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் சூத்திரதாரியான, இலங்கையில் தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரானிடம் பயிற்சிப்பெற்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் சஹ்ரானிடம் குறித்த இருவரும் ஆயுத பயிற்சி பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் அம்பாறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .