2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறைச்சாலைக்குள் போதைப் ​பொருளை கடத்திய காவலாளி கைது

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 10 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் பெக்கட் ஒன்றை கொண்டு செல்ல முயற்சித்த சிறைச்சாலை காவலாளி ஒருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த காவலர் அவரது வாயில் மென்றுக் கொண்டிருந்த வெற்றிலையில் மறைத்து வைத்து இந்தப் போதைப் பொருளைக் கடத்த முயன்ற போது, சிறைச்சாலை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, பொரலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த சந்தேகநபர், பல காலமாக இவ்வாறு போதைப் ​பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றமை ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .