2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தடியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

George   / 2017 ஜனவரி 01 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளியாப்பிட்டிய – இலுக்ஹேன பிதேசத்தில் இடம்பெற்ற மோதலில் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நபர் அவருடைய வீட்டுக்குள் வைத்து தடியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளானவர் படுகாயமடைந்த நிலையில், குளியாப்பிட்டிய வைத்தியசா​லையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இலுக்ஹேன - குடாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே, உயிரிழந்துள்ளதுடன் குடும்பப் பிரச்சினை காரணமாக  இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் ​கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .