2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஹசீஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Editorial   / 2017 நவம்பர் 26 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹசீஸ் எனப்படும் ஒருவகை போதைப் பொருளுடன்  ஒருவர் தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருமலை பகுதியில் வைத்து  சந்தேக்தின் பேரில் நேற்று (25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் விசேட படைப்பிரிவு முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் கைதுசெய்யபட்டுள்ளார்.இவரிடமிருந்து  33 கிலோ 925 கிராம் ஹசீஸ் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,இதன் பெறுமதி 20 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. 

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தலைமன்னாரைச் சேர்ந்த 34 வயதானவர் என்றும்,அவரை இன்று (26) மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .