2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹெரோயினுடன் இருவர் கைது

Editorial   / 2017 நவம்பர் 26 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பியன்வெல வீதிக்கு அருகில் 310 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்று (25) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வான் ஒன்றில் குறித்த ஹெரோயினை கொண்டு சென்றப் போதே போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,சந்தேகநபர்கள் கிரான்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 31 வயதானவர்கள் என்றும்,இதில் பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,இவர்களது வாகனம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று (26) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிஸ் போதைத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .