2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நான்காயிரம் கோள்கள் கண்டுபிடிப்பு

Editorial   / 2019 மார்ச் 27 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூமியின் ஓர் அங்கமாக விளங்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பூமியில் மட்டுமல்லாது விண்ணிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

1992ஆம் ஆண்டு அலெக்ஸ்சாண்டர் வோல்ஸ்சான் மற்றும் டேல் ஃபிரெய்ல் ஆகியோர் ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள்களைக் கண்டறிந்ததே நாம் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே கோள்கள் கண்டறியப்பட்டது முதல் முறையாகும்.

ஐரோப்பாவின் 'தி எக்ஸோசோலார் பிளானட்ஸ் என்சைக்ளோபீடியா' இதுவரை 4,000க்கும் மேலான கோள்களை, சூரிய மண்டலத்துக்கு வெளியே இருப்பதை உறுதிப்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நாசா 4,000 எனும் இலக்கை அடைய இன்னும் 74 கோள்களை ஆவணப்படுத்த வேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X