2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காட்டுக்குள் வசிக்கும் நவீன சந்ததியினர்

Nirshan Ramanujam   / 2017 ஜூலை 31 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவீன தொழில்நுட்பம் வேண்டாம், பழங்காலத்து வாழ்க்கையே உகந்தது என்று 10 வருடங்களாக காட்டுக்குள் வசிக்கும் குடும்பத்தின் கதை இது.

ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் வசித்து வந்த காதலர்கள், இயற்கையோடு ஒன்றித்து காட்டுக்குள் சென்று வாழ்வதற்கு தீர்மானித்தனர்.

அதன் பிரகாரம் காட்டுக்குள் சிறிய குடில் ஒன்றை அமைத்துக்கொண்டு 2007 ஆம் ஆண்டு குடியேறினர். மனித குலத்தின் நோக்கம், நன்றாக உண்டு, உறங்கி அடுத்த சந்ததியினரை தோற்றுவிப்பதாகும் என அவர்கள் அந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.


டொட் மற்றும் அவரது காதலியான டெய்லா என்பவருமே திருமணத்தின் பின்னர் இவ்வாறு குடியேறினர்.

2009 ஆம் ஆண்டு இவர்களோடு குடும்பத்தவர்கள் 12 பேர் இணைந்துகொண்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள், மாசுபட்ட இடத்தில், அவசரமான சூழலில் வாழ்வதை விட இந்த காட்டு வாழ்க்கை இன்பம் தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இவர்கள் தற்போது இயற்கை மரங்களிலான குடில் அமைத்து கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

வாரத்துக்கு ஒரு தடவை ட்ரக் வண்டியின் மூலம் நகரத்துக்குச் சென்று வாசிக சாலையில் கணினிகளை உபயோப்பதையும் பத்திரிகைகளை வாசிப்பதையும் வழமையாகக் கொண்டுள்ளனர்.

தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு வகையில் சாதகமாக இருக்கின்ற போதிலும் பல்வேறு  வழிகளில் தமக்கு தொந்தரவாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .