திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

ஆர்ப்பாட்டமில்லாமல் உதவும் அஜித்..!

 

தமிழ் திரையுலகில் ஆர்ப்பாட்டமில்லாமல் உதவும் நடிகர்கள் ஒருசிலர்தான் உள்ளனர். அந்த வரிசையில் அஜித்துக்கும் இடமுண்டு. அவர் இப்பொழுது உதவ முன்வந்திருப்பது பிரபுதேவா குடும்பத்துக்கு.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறார் நயன்தாரா என்று பல வதந்திகள் வரத்தொடங்கியிருக்கின்றன. பாஸ் என்கிற பாஸ்கரன் தான் நயன்தாரா நடிக்கும் கடைசிப் படமாக இருக்கும் எனவும் வதந்திகள் வருகின்றன. படப்பிடிப்பில் சரியாக ஒத்துழைக்கிறாரில்லை என்று வந்த வதந்திகளை பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இயக்குநர் ஏறகனவே மறுத்திருந்தார். இப்படி பல திசைகளிலிருந்தும் எதிர்ப்பினை சம்பாதித்துவரும் நயன்தாராவுக்கு உறுதுணையாக இப்பொழுது இருப்பவர் பிரபுதேவா.

பிரபுதேவாவும் பாரிய நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் நயன்தாராவின் சம்பள பணம் பூராவும் பிரபுதேவாதான் அனுபவிக்கிறார் என்றும் கிசுகிசுகள் அடிபடாமலில்லை. ஒருவேளை நயன்தாரா இனிமேல் நடிக்காமல் விட்டால், அவருக்கும் சேர்த்து பிரபுதேவா சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்.

இந்நிலையில்தான் பிரபுதேவாவின் கஷ்ட சூழ்நிலையை அறிந்து தனக்கு ஒரு கதை பண்ணும்படி பிரபுதேவாவிடம் கூறியிருக்கிறார் அஜித். ஏனையவர்களின் ‘தலை’ காப்பதில் ‘தல’ எப்பொழுதும் பின்நிற்பதில்லை என்று திரையுலகில் குறிப்பிடுவார்கள். அந்த வார்த்தையினை மெய்யாக்குவதுபோல் பிரபுதேவாவுக்கு அதிர்ஷ்ட கதவினை திறந்து விட்டிருக்கிறார் அஜித்.

பூரிப்பில் இருக்கும் பிரபுதேவா தகுந்த கதையினை அஜித்துக்காக தேடிக்கொண்டிருக்கிறாராம்.

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: