திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

ஜீவாவின் வந்தான் வென்றான்

 

சிறிய இடைவெளிக்குப் பின்னர் ஜீவாவின் படத்திற்கு இன்று சனிக்கிழமை பூஜை போடப்பட்டிருக்கிறது. ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற இரண்டு வெற்றிப்படங்களை தந்த ஆர்.கண்ணனின் மூன்றாவது படமாக உருவாகிறது வந்தான் வென்றான்.

கண்ணனின் குருவாகிய இயக்குநர் மணிரத்தினம் தானாவே நேரில் வந்து இப்படத்தின் தொடக்க விழாவினை சிறப்பித்திருக்கிறார். ''என்னுடைய நண்பரும் உதவி இயக்குநராக இருந்தவருமான கண்ணன், தொடர்ச்சியாக இரண்டு வெற்றிப்படங்களை தந்திருக்கிறார். நிச்சயமாக வந்தான் வென்றான் படமும் வெற்றிபெறும். இவரது வளர்ச்சியைப் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது'' என உளமார வாழ்த்தியிருக்கிறார் இயக்குநர் மணிரத்தினம்.

வாசன் விஸூவல்ஸ் வென்ஸர்ஸின் தயாரிப்பில் உருவாகும் 'வந்தான் வென்றான்' திரைப்படத்தின்  கதாநாயகனான ஜீவா, கால்பந்தாட்ட வீரராகவும் மென்பொருள் பொறியியலாளராகவும் நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்கும் தபஸி, பொறியியலாளராக நடிக்கிறார். எஸ்.தமான் இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

மும்பாயினையும் சென்னையினையும் தளமாகக் கொண்டு உருவாகும் 'வந்தான் வென்றான்' படத்திற்கு வசனம் எழுதுகின்றார் பட்டுக்கோட்டை பிரபாகர். ''வித்தியாசமான போராட்டத்தின் மத்தியில் உருவாகும் காதல்கதை வந்தான் வென்றான்'' என்கிறார் இயக்குநர் கண்ணன்.
இப்படம் ஜீவாவுக்கும் கண்ணனுக்கும் பெரு வெற்றிப்படமாக அமையுமென அனைவரும் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இயக்குநர் கண்ணனுக்கு இப்படம் 'ஹெட்றிக்' வெற்றியைக் கொடுக்கும் என எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: