பிராந்திய செய்திகள்
யாழ்ப்பாணம்
கச்சாய் ஊடான பஸ் சேவையை மீளஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை
ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010 12:00
(சரண்யா)
தென்மராட்சி, கச்சாய் பகுதியில் கடந்த 6 மாதங்களாக போக்குவரத்துச்சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்கிவருகின்றனர்.
கச்சாய் பகுதியிலுள்ள மாணவர்கள், உத்தியோகத்தர்கள், பல்வேறு தேவைகளின் நிமித்தம் பயணிப்போருக்கான போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொடிகாமத்திலிருந்து கச்சாய் ஊடாக யாழ்ப்பாணம் வரை பயணிக்கின்ற 809 ஆம் இலக்க இ.போ.ச. பஸ் ஒன்று சேவையில் ஈடுபட்டுவந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் பயனடைந்தனர்.
ஆயினும் கடந்த 6 மாதங்களாகக் குறித்த பஸ் சேவை திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளதால் சீரான போக்குவரத்தை மேற்கொள்ளமுடியாமல் கச்சாய் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை பருத்தித்துறையிலிருந்து கொடிகாமம் ஊடாக கச்சாய்வரையும் 759 ஆம் இலக்க பஸ் சேவையிலீடுபட்டு வந்தது. அதுவும் பலகாலமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, இப்பகுதி மக்களின் போக்குவரத்துப் பிரச்சினையை தீர்க்க கச்சாய் ஊடான பஸ் சேவையை மீளஆரம்பிக்குமாறு மக்கள் கோரியுள்ளனர்.

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1130
|
05-02-2012 08:00 PM Hits:683
|
.gif)
.jpg)
