திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு இலக்கியப் போட்டிகள்

(எஸ்.ஜெனி)

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவில் தமிழ்ச் செம்மொழி விழாவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்செம்மொழி விழாவில் தமிழியல் வரலாறு தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து உரையாற்றலாம்.

அத்துடன், கவிதை, சிறுகதை போட்டியிலும் பங்கு பெறலாம். சிறுகதை ஆயின் மூன்று முதல் ஐந்து பக்கங்களும் கவிதை எனில் மரபுக் கவிதை என்றால் ஆறு தொடக்கம் ஒன்பது பந்திகளில் எழுத வேண்டும். புதுக்கவிதைக்கு வரையறை இல்லை.

ஆக்கங்கள் யாவும் 30.09.2010இற்கு முன்னதாக ஷ-எஸ்-திவகரன், பொதுச்செயலாளர், மன்னார் தமிழ்ச்சங்கம், இல ௩0 வைத்தியசாலை வீதி, மன்னார் எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.

இவ்விழா தொடர்பானதும் போட்டிகள் சம்பந்தமாகவும் மேலதிக விபரங்களைப் பெறுவதற்கு 0233233276, 071497382 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: