திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

தேசிய சிறைக்கைதிகள் வாரம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பம்

 

(ஜௌபர்கான்)

தேசிய சிறைக்கைதிகள் வாரம் இன்று காலை மட்டக்களப்பில் ஆரம்பமாகியது. சிறைக்கைதிகள் கொடி தினத்தையொட்டிய முதலாவது கொடி மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதனுக்கு மாவட்ட செயலகத்தில் வைத்து சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டாரவினால் அணிவிக்கப்பட்டது.

சிறைச்சாலையில் இடம்பெற்ற வைபவத்தில் கண்பார்வை குறைந்த கைதிகளுக்கு மூக்குகண்ணாடிகள் வழங்கப்பட்டன. லயன்ஸ் கழக அனுசரணையுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சிறைக்கைதிகள் நலன்புரி சங்க தலைவர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இவ்வைபவத்தில் பங்கெடுத்தனர். தொடர்ந்து 7 நாட்களுக்கு வைபவங்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெறவுள்ளதாக சிறைச்சாலை நலன்புரி அதிகாரி எஸ்.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: