பிராந்திய செய்திகள்
மலையகம்
தேயிலைச் செடிகளுக்கிடையில் சடலம் மீட்பு
செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010 20:54
( எஸ்.சுவர்ணஸ்ரீ )
மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றின் தேயிலைச் செடிகளுக்கிடையில் இருந்து ஆணொருவரின் சடலத்தை மஸ்கெலியா பொலிஸார் இன்று மாலை மீட்டுள்ளனர்.
நோட்டன் - மஸ்கெலியா பிரதான பாதையில் ஹபுகஸ்தென்ன தெபர்ட்டன் தோட்டத்துக்கு அருகில், பிரதான பாதையிலிருந்து 5 மீற்றர் தூரமுள்ள தேயிலைச் செடிகளுக்கிடையில் இருந்தே, பொலிஸார் இச்சடலத்தினை மீட்டுள்ளனர்.
இன்று காலை இந்த இடத்திற்கு விறகு சேகரிப்பதற்குச் சென்ற பிரதேச மக்கள் இச்சடலத்தினை கண்ணுற்றுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸாருக்கு உடனடியாக அவர்கள் அறிவித்ததனர்.
பலியானவர் திவுலபிட்டிய என்ற இடத்தைச் சேர்ந்தவர் சுமார் 48 வயது மதிக்கப்பட்டவர் என்றும் இவர் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1130
|
05-02-2012 08:00 PM Hits:682
|
.gif)
.jpg)
