திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்க சமசமாஜக் கட்சி தீர்மானம்

 

 

(யொஹான் பெரேரா)

அரசியலமைப்புத் திருத்த யோசனைகளுக்கான வாக்கெடுப்பிலிருந்து இலங்கை சமசமாஜக் கட்சி விலகியிருக்கும் என அக்கட்சியின் பேச்சாளர் சற்றுமுன் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் திஸ்ஸ விதாரணவும் இக்கூட்டத்தில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. மேற்படி தீர்மானம் அரசியல் குழுவினால் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்பேச்சாளர் கூறினார்.

சமசமாஜக் கட்சி, அதன் முன்னாள் தலைவர் கலாநிதி என்.எம். பெரேராவின் காலத்திலிருந்து நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை எதிர்த்து வருவதன் அடிப்படையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இக்கட்சியின் சார்பில் அமைச்சர்  திஸ்ஸவிதாரணவுடன் கேகாலை மாவட்டத்தை சேர்ந்த வை.ஜி. பத்மசிறியும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்க்கது.
 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: