திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

'புதிய சட்டங்கள் மனிதக்கடத்தல்களை தடுப்பதற்கு உதவுகின்றன'

மனிதக் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாக இலங்கையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் இத்தகைய கடத்தல்களைத் தடுப்பதிலும் குற்றமிழைப்பவர்களுக்கு தண்டனையளிப்பதிலும் சரியான திசையில் செல்லும் நடவடிக்கைகள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆட்கடத்தல் தொடர்பாக கொழும்பில் நேற்ற நடைபெற்ற, விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித் திட்டமொன்றின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்கத் தூதுவர் பட்றிசியா புட்டெனிஸ், மேற்படி குற்றச்செயலை முறியடிப்பதில் இலங்கை வெளிவிவகார அமைச்சும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியமும் தலைமை வகிப்பதாகக் கூறினார்.
இலங்கைக் கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்காரவும் மேற்படி வைபவத்தில் கலந்துகொண்டமை  குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் உடலில் 24 ஆணிகள் ஏற்றப்பட்டமை குறித்து அமெரிக்கத் தூதுவர் கருத்துத் தெரிவிக்கையில், அப்பணிப்பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என தான் நம்புவதாகக் கூறினார்.

குமார் சங்கக்கார கருத்துத் தெரிவிக்கையில், மனிதக்கடத்தில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கை ஒரு மூலமாக இருப்பதாகவும் இதற்கு எதிராக அனைத்து இலங்கையர்களும் திரள வேண்டும் எனவும் கூறினார்.
 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: