திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ஐ.தே.க.

 

 (கெலும் பண்டார)

உத்தேச அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பாக அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி இன்று வலியுறுத்தியுள்ளது. அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்த யோசனைகள் அடுத்த வாராம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐ.தே.க. பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இத்தகைய 'கொடுமையான' அரசியலமைப்புத் திருத்தத்திற்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் ஆணை பெறவில்லை எனக் கூறினார்.

நீதிமன்றத்தில் ஐ.தே.க வழக்குத் தொடுக்குமா எனக் கேட்கப்பட்டபோது, கட்சியின் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடியபின் இது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்போது சுய விருப்பின் அடிப்படையில் வாக்களிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: