திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

கிருந்த துறைமுகத்திலுள்ள கடல் மணலை விற்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

(இந்திக்க ஸ்ரீஅரவிந்த)

கிருந்த துறைமுகத்திலுள்ள கடற்கரையோர மணலை மாலைதீவுக்கு விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

கிருந்த துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளுக்களின் பின்னர் கடலில் கழுவிச் செல்லப்பட்ட மணலே இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக  புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி என்.பி.விஜனாந்த தெரிவித்தார்.

இந்நிலையில், வெளிநாடுகளுக்கு கடற்கரையோர மணலை விற்பனை செய்வதற்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளும் முகமாக அமைச்சரவையிடம் மீன்பிடித்துறை அமைச்சு பத்திரமொன்றை கையளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், இவ்வாறு கடல் மண்ணை மாலைதீவுக்கு விற்பனை செய்வதால், துறைமுகத்திற்கு கப்பல்கள் நுழைய முடியாது எனவும் கவலை என்.பி.விஜனாந்த வெளியிட்டார்.   



 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: