திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டால் அரசுடன் இணைவோம்: ஐ.தே.க. கிளர்ச்சிக்குழு

 

(இந்திக ஸ்ரீ அரவிந்த)

தமக்கெதிராக கட்சியில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அரசாங்கத்துடன் இணைந்துவிடுவோம் என அரசியலமைப்புத் திருத்த வாக்கெடுப்பின்போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்த ஐ.தே.க அங்கத்தவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ல் குணசேகர இது தொடர்பாக கூறுகையில், ஐ.தே.க. அங்கத்தவர்கள் சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்தமையானது தனிநபர்கள் என்ற ரீதியில் தீர்மானம் மேற்கொள்வதற்கு கட்சியிலுள்ள ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

தமக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அதேபோன்ற நடவடிக்கை கரு ஜயசூரியவுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்த நான்கு சிரேஷ்ட அங்கத்தவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஐ.தே.க. பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கடந்தவாரம் டெய்லி மிரருக்குத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: