டெய்லி மிரர் ஊடகவியலாளர்களுடன் மேர்வின் சில்வா பேச மறுப்பு
திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010 13:16
களனியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் செய்தி சேகரிப்புக்காகச் சென்ற டெய்லி மிரர் இணையத்தள ஊடகவியலாளர்களுடன் முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பேச மறுத்துள்ளார்.
மேர்வின் சில்வாவின் ஊடகப் பிரிவின் அழைப்புக்கு இணங்கவே டெய்லி மிரர் இணையத்தள ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புக்காகச் சென்றிருந்தனர்.
களனியில் வசிப்பவர்களுக்கு உலர் உணவுப் பொருள்களை மேர்வின் சில்வா வழங்கியதுடன், கம்பஹா மாவட்டத்திலுள்ள தனது ஆதரவாளர்களையும் மேர்வின் சில்வா சந்தித்தார்.
இந்நிலையில், டெய்லி மிரர் இணையத்தள ஊடகவியலாளர்கள் மேர்வின் சில்வாவை அணுகி சில கேள்விகளைக் கேட்டனர். இதன்போது, நீங்கள் எந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என மேர்வின் சில்வா கேள்வியெழுப்பினார்.
தாம் டெய்லி மிரர் இணையத்தளத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் என பதிலளித்தபோது, டெய்லி மிரரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் எவருடனும் தான் கதைக்க மாட்டேன் எனவும் மேர்வின் சில்வா கூறினார்.
மீண்டும் டெய்லி மிரர் இணையத்தள ஊடகவியலாளர்கள் மேர்வின் சில்வாவை அணுகியபோது, இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் டெய்லி மிரர் இணையத்தள ஊடகவியலாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் மேர்வின் சில்வா கேட்டுக்கொண்டார். (DM)

யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
வன்னி செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
05-02-2012 03:34 PM Hits:1091
|
05-02-2012 08:00 PM Hits:657
|
.gif)
.jpg)
