வியாழக்கிழமை, 29 ஜூலை 2010 15:15
பாதசாரிகளுக்கான கடவையைப் பயன்படுத்துமாறு தம்மை அறிவுறுத்திய போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை திட்டிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் குறித்து கண்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிவிலுடையில் இருந்த மேற்படி இன்ஸ்பெக்டர், கண்டி தலதா வீதியில் பாதசாரிகளுக்கான கடவையை பயன்படுத்தாமல் வேறு இடத்தில் வீதியைக் கடக்க முற்பட்டாராம்.
அப்போது பாதசாரிகளுக்கான கடவையைப் பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அறிவுறுத்தியபோது, அவரை தகாத வார்த்தைகளால் இன்ஸ்பெக்டர் திட்டினாராம்.
இந்நிலையில், குறித்த இன்ஸ்பெக்டருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Set as favorite
Bookmark
Email this
பார்வை: 129
Comments (1)

Write comment

.jpg)

