வியாழக்கிழமை, 29 ஜூலை 2010 17:53

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அனுசரணையுடன் நயினாதீவு மேகலை அரங்கில் நேற்று இரவு பல் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
வேலணைப் பிரதேச செயலர் மு. நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் திருமதி.எம்.எஸ்.விக்கிரமசிங்க, யாழ். அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார், வடக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எம்.பி.வீரசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலாசார நிகழ்வுகளாக நயினாதீவு மகாவித்தியாலய மாணவர்களின் நடனம், பண்ணிசை, இஸ்லாமிய நடனம், வவுனியா தெற்கு மாணவர்களின் நடனம், கிராமிய நடனம் என்பனவும் இடம்பெற்றன. (படங்கள் :- ராஜா)




Set as favorite
Bookmark
Email this
பார்வை: 47
Comments (0)

Write comment

.jpg)

