மதுர குரலோனின் 'மதுரகானம்'...
திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011 21:12
.jpg)
கொழும்பு, வெஸ்லி கல்லூரியில் நீச்சல் தடாகமொன்றை நிர்மாணிப்பதற்கு நிதி சேகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இசை நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
சுமார் 3 கோடி ரூபா செலவில் இந்த நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி, இந்திய இசைக் கலைஞர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
'மதுரகானம்' எனும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியானது பிரபல தென்னிந்தியப் பாடகர் மதுர குரலோன் மதுபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன் இந்திய ஜூனியர் சூப்பர் சிங்கர்களான நித்தியஸ்ரீ, ஸ்ராவன் ஆகியோருடன் இந்திய திரைப்பட நடனக் கலைஞர் ஜெயலக்ஷ்மியின் நடனங்களும் இதில் இடம்பெற்றன.
இதேவேளை, விஜய் தொலைக்காட்சி அலைவரிசைப் புகழ் சிவகார்த்திகேயன் இந்த இசை நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கியதுடன், இலங்கையின் இசைக் கலைஞர்களான பிரசாந்தினி, ஷாயா, அஜித், சத்தியா சுரேஸ் ஆகியோரும் இணைந்து தங்களது பங்களிப்புக்களை நல்கினர்.
சித்தாரா இசைக் குழுவினர் இசையில் நடைபெற்ற இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் கலைஞர்கள் மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம். Pix By :- Nisal Baduge
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)



யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
21-02-2012 11:45 PM Hits:1009
|
22-02-2012 03:14 PM Hits:814
|
.jpg)
.jpg)
