2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

துன்பம் அழிவது; பயம் எதற்கு?

Editorial   / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 06:00 - 1     - {{hitsCtrl.values.hits}}

துன்பங்கள் சூழும்போதுதான், ஒருவரு​டைய நாணயம் புலப்படுகின்றது. கஷ்டங்கள் வந்துவிட்டால் இஷ்டப்படி வாழாமல் நேரிய வழியில் செல்பவனே தரணியில் உயர்ந்தோராகக் கருதப்படுகின்றான். 

இடர்வந்தால், இது பொதுவான ஒன்று எனக் கருதி, தொடர்ந்து பயணிக்க வேண்டியதே, மானுடப் பெரும் பொறுப்புமாகும். 

தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களுக்காகப் பிறர்மீது பழிசொல்வதும் வஞ்சிப்பதும் ஏற்புடையதல்ல. ஆயினும், சில சமயங்களில் பிறர் மூலமும் பிரச்சினைகள் எழுவதுண்டு.  

நாம் வாழும் முறையில் கண்ணியமும் நேர்மையும் இருந்தால் வருகின்ற பயன்கள் பன்மடங்காகும். எதிரிகளால் ஏற்படுத்தப்படும் வினைகளுக்கு அவர்கள் விதியே தகுந்த பதில் அளிக்கும். 

தண்டனை வழங்குபவர் நாங்கள் அல்லர். நேர்மை நேரியது; துன்பம் அழிவது; பயம் எதற்கு?  

     வாழ்வியல் தரிசனம் 04/12/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 1

  • siva Monday, 04 December 2017 05:33 PM

    god is great . god bless you all .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X