2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘கணவன், மனைவி உறவு விசித்திரமானது’

Editorial   / 2017 நவம்பர் 29 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவன், மனைவி உறவு ரொம்பவும் விசித்திரமானதுதான். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, பின்னர் எப்படியோ கணவன் , மனைவியாகிவிடுகின்றனர்.  

அப்புறம் நடப்பது என்ன? ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பிக்கின்றனர். இதைக் காதல் என்ற வார்த்தைக்குள் மட்டும் அடக்கிவிட முடியாது. ஒருவரை ஒருவர் பிரிந்துவிட முடியாமல் தவிக்கின்றனர். ‘இவள் இல்லாமல் நான் இல்லை; இவன் இல்லாமல் நான் இல்லை’ என்றவாறான இருவரின் இருப்புகளும், அவர்களின்  அசைவுகளிலும் நினைப்புகளிலும் லயிப்புகளிலும்  எப்படித் தெரிகின்றது?  

பிள்ளைகளைப் பெற்று, அவர்கள் வளர்ந்த பின்னரும் கூட, எந்தவொரு மனைவியும் கணவனை, வளர்ந்த, முதிர்ச்சியடைந்த ஆன்மாவாக, நபராக கருதுவதேயில்லை.அவனைத் தனது குழந்தையாக , பிள்ளையாகவே கருதும் பாட்டி வயது அம்மாக்களை, நாங்கள் கண்டதுண்டு.  “இன்னமும் இவருக்குப் பொறுப்பேயில்லை; சின்னப்பிள்ளைபோல் இருக்கின்றார்” என்பாள். கணவன் சாப்பிடாமல் இருந்தால், இவளுக்கு மனம் பொறுப்பதேயில்லை. தன்னையே அவருக்கு அர்ப்பணிக்கின்றாள். அவனும் அப்படியே! இந்த யுகாந்திரத்துக்கும் மேலான பிணைப்பு எப்படி?  

     வாழ்வியல் தரிசனம் 29/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .