2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘தன்னை உணர்ந்தால், முன்னேறும் திறன் உருவாகும்’

Editorial   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களது பலவீனத்தையும் வல்லமையையும் தெரியாமலேயே பலர், பிறரை ஏளனம் செய்வது வேடிக்கையானதுதான்.

சபையில் ஓர் அறிஞர் நல்ல விடயங்களை மிகவும் அருமையாகச் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால், இதனைப் புரிந்து கொள்ளாமல் ஒன்றுமே புரியாத நபர் ஒருவர், “இவருக்கு வேறு வேலை இல்லை; சும்மா அலட்டிக் கொண்டிருக்கிறார்” என்றால், சுவாரஷ்யமாக அறிஞர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு கோபம் வராதா?

தங்களது பலவீனங்களை மறைக்கத் தங்களை ஒரு புத்திமானது எனக் கருதி வீண்பேச்சுப் பேசுபவர்கள், கண்ணியம் எது என அறிந்திருத்தல் வேண்டும்.

தான் யார்? தனது அறிவு எத்தகையது என உணர்ந்தால்தான், முன்னேறும் திறன் உருவாகும்.

வாழ்வியல் தரிசனம் 05/02/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .