2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘புரியாத ஆச்சரியமூட்டும் தேவதைகள்’

Editorial   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரசக் கலப்புகள் நிறைந்ததே வாழ்க்கையாகும். இவை உணர்வுபூர்வமானவை. அடிக்கடி மாறும் இயல்பு கொண்டவை. சில பொழுது மென்மையாகவும் சில சமயங்களில் தன் இயல்பை வன்மையாகவும் மாற்றியமைப்பதே பொதுவான குணமும் கொண்டது. இதற்குள் புகுந்து கொள்ளாதவர் எவரும் இல்லை. 

பெண்களிடத்தில் இந்தக் குணங்கள் மிகையானவை. எப்பொழுதும் மென்மை, சாந்தம், இரக்கச் சுபாவங்கள் இயல்பாக உள்ளமையினால் உணர்வு, உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஏனெனில், இவர்கள் தாய். 

இவர்களைப் புரிந்துகொள்வதே ரொம்பவும் கடினமானது என்கின்றார்கள். வீரமும் விவேகமும் இருக்கும் கனிவும் நிரம்ப இருப்பதால், சூழ்நிலையைப் புரிந்து கொள்ளும் அறிவைப் பெற்றிருப்பார்கள். இது சமானிய விடயம் அல்ல. 

பெண்களின் மன ஆழம் அதிசயிக்கக் கூடியது. இது ஆண்களுக்குப் புரியாமல் இருப்பது புதுமையும் அல்ல. நவரசங்களினால் தன்னைத்தான் சுவீகரித்து, சமூக நடப்புகளையும் அனுசரித்து வாழும் புனிதப் பிறவிகள்! புரியாத ஆச்சரியமூட்டும் தேவதைகள், இந்தப் பெண் பிறவிகள். 

   வாழ்வியல் தரிசனம் 04/09/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .