2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மக்களை ஒன்று சேர்க்கும் உபாயமே சமஷ்டி

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 “எனக்கென்று கட்சி ஒன்றில்லை.என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பயணிக்கலாமென“ வடக்கு முதல்வர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

“கட்சி அரசியல் எதுவும் வேண்டாம் என்றிருந்த என்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் 5 கட்சிகள் சேர்ந்த தலைவர்கள் ஒருங்கே வந்து வலிந்து கேட்ட போது மறுக்க முடியாமல் அரசியலில் கால் வைத்தேன். நான் சேர முன் வந்தது அந்த ஐந்து கட்சிகள் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்ளே அப்போது அது பதிவு செய்யப்படாத ஒரு அரசியல் கூட்டமைப்பு என்பது கூட தெரியாமலிருந்தது.சேர்ந்த போதுதான் பலதும் தெரியவந்தது.” என முதலமைச்சர் தெரிவித்தார்.

“விஞ்ஞான கொள்கைகளுக்கும், விரிவியிருந்த யதார்த்த நிலைக்கும் இடையில் பாரிய விரிசல் இருந்த​தை உணர்ந்தேன். கொள்கைகள் மக்களுக்கு ஆனால் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் கட்சித் தலைமைப்பீடங்களுக்கே என்பது யதார்த்தமாக​வே இருந்தது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்ட முடிவுகள் எவ்வித கூட்டுக்கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்பதையும் கண்டு கொண்டேன். அங்கு சுயநலமே கட்சித் தலைமைப்பீடத்தால் கருத்திற்கொள்ளப்பட்டது என்பதையும் உணர்ந்துக்கொண்டேன்.

கட்சித் தலைமைத்துவம் கட்சிக் கொள்கைககளை மாற்றும் போது உபயோகிக்கும் கருவி தான் ஒழுக்கம் என்ற பிரம்பு. நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யுங்கள். இல்லையேல் அடுத்த முறை உங்களுக்குக் கட்சித் துண்டு கிடைக்காது” என்பார்கள் அல்லது “ நாங்கள் சொல்வதை நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சென்றீர்கள் என்றால் அடுத்த முறை உங்களுக்கு துண்டு நிச்சயம்” என்பார்கள் .அவ்வாறு கூறி உறுப்பினர்களை சதி வேலைகளில் ஈடுபடுத்தியமையும் உண்டு என வடக்கு முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

“சமஷ்டி ஒரு பூச்சாண்டியும் இல்லை.பிரிவினையும் இல்லை.மாறாக மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு அரசியல் உபாயம் என்பதை நாங்கள் சிங்கள மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.எங்களுக்குள் சிங்களம் தெரிந்தவர்கள் இதனைச் செய்ய வேண்டும்.சிவாஜிலிங்கமும், நானும் இதைச் செய்கின்றோம்.அதேப் போல் சம்பந்தனும், சுமந்திரனும் சிங்களம் தெரிந்தவர்கள் என்ற முறையில் சிங்கள மக்களுக்கு சமஷ்டியின் தேவையையும், அரசியல் ரீதியான பொருத்தத்தையும் எடுத்துக்கூற முன்வரவேண்டும்.எம்முள் சிலர் “அது எப்படி சமஷ்டியைக் கேட்பது சிங்களவர்கள் அதற்கெதிரே ” என்று கூறுகின்றார்கள். அவர்கள் தான் தெற்கில் இருந்துக்கொண்டு சிங்கள மக்கட் தலைவர்களை உசுப்பேற்றி விடுகின்றார்கள்.” என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X