2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலாபமீட்டும் நிறுவனமாக இ.போ.ச

Editorial   / 2017 நவம்பர் 26 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் போக்குவரத்து சபை இலாபமீட்டும் நிறுவனமாக மாறியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(25) உரையாற்றும் போதேஅவர் இதனைத் தெரிவித்தார்.

எனவே இதனால் மகிழ்ச்சியடைவதுடன்,இதன் சேவையாளர்களுக்கான கொடுப்பனவுகளும் உரியமுறையில் வழங்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் சிவில் விமானசேவை ​கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்​டியுள்ளதாகவும்,விமான நிலையத்தின் வருமானமும் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் 160 புகையிரத பெட்டிகளை பெற்றுக்கொள்ள இந்திய நிதியுதவியின் கீழ் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X