2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தனுவுக்குக் கௌரவம்

Editorial   / 2018 மே 09 , பி.ப. 04:44 - 1     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள பிரபல ஊடக ஆளுமையான தனு இன்னாசித்தம்பி, உலக சமாதானத்துக்கும் இராஜதந்திரத்துக்குமான நிறுவனத்தின் சமாதானத் தூதுவராக நியமிக்கப்பட்டு, கௌரவமளிக்கப்பட்டுள்ளார். இந்தக் கௌரவம், இந்தியாவின் மும்பையில் இடம்பெற்ற, பூகோள வணிகத் தலைமை மன்ற மாநாட்டில், அவருக்கு வழங்கப்பட்டது.

இவ்விருது கிடைத்தமை குறித்துக் கருத்துத் தெரிவித்த தனு, "தனு இன்னாசித்தம்பி அறக்கட்டளையின் பணிகளைப் பகிர்வதற்கான வாய்ப்பொன்று வழங்கப்பட்டமை குறித்து, நான் மகிழ்ச்சியடைகிறேன். நல்லிணக்கம் தொடர்பான எமது பணிகளுக்கு, இவ்விருது மூலமாக அதிக வாய்ப்பு ஏற்படுகிறது" எனத் தெரிவித்தார்.

பெருமைமிக்க இவ்விருது, பூகோள சமாதானத்துக்காகக் கடுமையாக உழைத்தவர்களுக்காகவும் சமூகத்தின் மனிதாபிமானப் பங்களிப்புகளை வழங்கியவர்களுக்காகவும் வழங்கப்படும் ஒரு கௌரவமாகும்.


You May Also Like

  Comments - 1

  • Ma.Sithivinayagam Monday, 14 May 2018 03:08 AM

    பாரினில் துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி ஒளியாக விளங்குகின்ற ஊடகவியல் மகத்தானது. அதில் வெற்றி கண்ட ஊடக தோழருக்கு என் இனிய வாழ்த்துக்கள் ! " journalism is the ability to meet the challenge of filling space " இலங்கைத் திருநாட்டின் நம்பிக்கை தரும் நல்லூடகமாக தன் ஊடகவியல் பணியில் ஒளிரும் Tamilmirror க்கும் என் வாழ்த்துக்கள் Sithivinayagam journalist

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X