2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’​ஐ போன்களின் விலை அதிகரிக்கும்’

Editorial   / 2018 டிசெம்பர் 04 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்பிள் நிறுவனம் தனது ஐ போன்களை அமெரிக்காவில் வைத்து வடிவமைத்தாலும் அனேகமானவற்றை சீனாவில் வைத்தே அசெம்பிள் செய்கின்றது.

இதற்கு காரணம் சீனாவில் மட்டுமே குறைந்த செலவில் அசெம்பிள் செய்யக்கூடியதாக இருக்கின்றமையாகும்.

எனினும் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் இலத்திரனியல் பொருட்களுக்கு மேலதிக வரி அறவிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அலைப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகளின் விலை அதிகரிக்கும்.

இவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டால் மொத்த வரியானது தற்போதுள்ள வரியுடன் சேர்த்து 25 சதவீதத்தை எட்டும்.

எவ்வாறெனினும் ட்ரம்ப்பின் இந்த முடிவினால் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் குக் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X