2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சோபியாவுக்கு 5 வருடங்கள் கடந்தன

Editorial   / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதலாவது மனித ரோபோ எனக் கருதப்படும் சோபியா உருவாக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்துள்ளன.

இந் நிலையில் குறித்த ரோபோவை உருவாகிய  ஹன்சன் ரோபோட்டிக்ஸ் (Hanson Robotics) என்ற நிறுவனம்  தற்​போது சோபியாவின்  தங்கையாக  ஜோய்ஸ் (Joyce) என்ற புதிய மனித ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.  

மேலும் இப்புதிய ரோபோவினை ஹொங்கொங்கை தலைமையகமாகக் கொண்ட குறித்த  நிறுவனமும் கனடாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான இம்மர்விஷனும் ( ​​​imervision )இணைந்து உருவாக்கியுள்ளன.

அந்தவகையில் குறித்த ரோபோவில் ultra-wide-angle panomorph என்ற கெமெரா தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு நியூரல் நெட்வொர்க் மற்றும் கணினி பார்வைக்கு தரவை வழங்க டேட்டா-இன்-பிக்சர் தொழில்நுட்பம் மற்றும் பல சென்சர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .