2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கையின் சிம்பாப்வே சுற்றுப் பயணம்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.விமல்

இலங்கை அணி, சிம்பாப்வே நாட்டுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. சிம்பாப்வே அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் முக்கோண ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் விளையாடவுள்ளது. இலங்கை அணி 12 வருடங்களுக்கு பின்னர் சிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடவுளள்து.

மார்வன் அத்தப்பத்துவின் தலைமையில்யில், இலங்கை அணி மிகப்பலமாக இருந்த வேளையில், சிம்பாப்வே சென்று சிம்பாப்வே அணியைப் பிரித்து மேய்ந்து விட்டு வந்திருந்தனர். ஆனால் தற்போது அது சாத்தியமா? சிம்பாப்வே அணியும் கூட கொஞ்சம் சவால் விடும் நிலையில் உள்ளது. அவுஸ்திரேலிய அணியை இலங்கையில் வைத்து வெள்ளையடிப்புச் செய்து வெற்றியீட்டி இலங்கை பலமாகவே உள்ளது. சிம்பாப்வே அணியிடம் தோல்விகளைச் சந்தித்து வருமளவுக்கு இலங்கை அணி ஒன்றும் மோசமாக இல்லை.

உபாதையடைந்த வீரர்களைத் தவிர்த்து  பலமான அணியாகவே அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் உபாதையடைந்துள்ள நிலையில் அணிக்கு பாதிப்பு என்றே கூறலாம். ஏனெனில் தினேஷ் சந்திமாலும் உபாதையிலிருந்து குணமாகி வருவததால் தலைமையிடம் பின்னடைவாகவே உள்ளது. இவர்களைத்   தவிர்த்து மற்றைய முக்கிய வீரர்கள் யாவரும் இந்த தொடரில் விளையாடவுள்ளனர். இந்தத் தொடர் இலங்கை அணிக்கு நல்லதொரு பயிற்சித்  தொடராக அமையவுள்ளது. இந்தத் தொடர் நிறைவடைந்த பின்னர் இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கான தொடரை  மேற்கொள்ளவுள்ளது. இது நல்ல களத்தினை இலங்கை அணிக்கு வழங்கும். தென்னாபிரிக்காவின் அண்டைய நாட்டில் இந்த்த தொடர்  நடைபெறுவதனால் இலங்கை அணி வீரர்கள் காலநிலையை பழகிக் கொள்ளும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன. அத்துடன் ஒரு நாள் சர்வதேசப்போட்டி தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியும் பங்குபற்றுவதானால் இலங்கை அணி நல்ல பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஓரளவு வீரர்கள் தயார் செய்யப்பட்டு விட்டாலும் பந்துவீச்சாளர்கள் இன்னமும் முழுமையாகத் தயாராகவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தென்னாபிரிக்காவில் நடைபெறும் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய இடம் பிடிப்பார்கள். இந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் தயாராக இல்லை என்பது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவே. தம்மிக்க பிராசத், துஸ்மந்த சமீர ஆகியோர் உபாதையடைந்துள்ள நிலையில் இவர்கள் இந்தத் தொடரிலும் மீள முடியவில்லை. எனவே இவர்கள் இருவரும் அடுத்த தொடரில் விளையாட முடியுமா என்பது கேள்வியே. மீண்டும் அணிக்குள் வந்தாலும் மேலதிகமாக இன்னுமொரு வேகப்பந்து வீச்சாளர் தேவை. மேலதிகமாக அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்ற நிலையில் தெரிவுக்குகுழுவினர் அதற்கேற்றபடி அணியை தெரிவு செய்துள்ளனர். 

இலங்கை அணி விபரம்

குஷால் பெரேரா, குஷால் மென்டிஸ், கெஷால் சில்வா, திமுத் கருணாரட்ன, தனஞ்சய டி சில்வா, நிரோஷான் டிக்கவெல்ல, ரங்கன ஹேரத்(தலைவர்), டில்ருவான் பெரேரா, லக்ஷான் சன்டகான், கஸூன் மதுசங்க, லஹிரு குமார, சுரங்க லக்மால், அசேல குணரட்ன, உப்புல் தரங்க  

இரு முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அஞ்செலோ மத்தியுஸுக்கு காலில் ஏற்பட்டுள்ள உபாதைகள் காரணமாக,  அணியில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக உப்புல் தரங்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தரங்க மத்திய வரிசையில் விளையாடுவார் என நம்பலாம். தினேஷ் சந்திமால் அணியில் இடம் பிடிக்கவில்லை. அவரின் பெருவிரலில் செய்துகொண்ட சத்திர சிகிச்சை முழுமையாக குணமடையாத நிலையில் அவருக்கு பதிலாக நிரோஷான் டிக்கவெல்ல அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். துடுப்பாட்ட வீரர். அத்துடன் விக்கெட் காப்பாளர். விக்கெட் காப்பாளர் அணிக்கு தேவையில்லை. ஏற்கனவே  3 விக்கெட் காப்பளர்கள் அணியில் உள்ளனர். இவர் அணியில் தொடர்ச்சியாக அணியில் இடம் பிடித்துவரும் ஒருவர். ஆனால் இவரின் தெரிவில் குழப்பங்கள் இல்லாமல் இல்லை. இவரிலும் பார்க்க சிறப்பாக ஓட்டங்களை குவித்து வரும் வீரர்கள் உள்ள போதும் இவருக்கு இடம் வழங்கப்படுகின்றது. அண்மையில் இடம்பெற்ற முதற் தரப்போட்டிகளிலும் ஓட்டங்களை பெரிதாக இவர் பெறவில்லை. இப்படி எல்லாம் எழுதியபடி கொஞ்சம் கடந்த முதற்தர போட்டிகளில் ஓட்டங்களை பெற்றவர்களை பார்த்தால் இவரே கூடிய ஓட்டங்களை பெற்றவர் இவரே.

திமுத் கருணாரட்ன அடுத்த வீரர். அவர் அணியில் தொடர்கிறார். ஆக மத்திய வரிசையின் முக்கிய இரு வீரர்களும், இலங்கை அணியின் முக்கியமான இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் இல்லாத நிலையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட பலம் இழந்துள்ளதாகவே கூற வேண்டும். தலைவராக முதற் தடவையாக ரங்கன ஹேரத் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு எல்லாமே காலம் தாமதமாகியே கிடைத்து வந்துளளது. தலைமைப் பொறுப்பை இவாறு செய்து காட்டப் போகின்றார்? பொறுத்து இருந்து பார்க்கலாம்.

திமுத் கருணாரட்ன டெஸ்ட் போட்டிகளில் அண்மைய போட்டிகளில் மோசமாகவே துடுப்பாடியுளார். ஆனாலும் கடந்த காலங்களில் இவர் சிறப்பாக செயற்பட்டமையும், அண்மைய முதற் தர போட்டிகளில் சதமடித்துள்ளமையும் இவருக்கு வாய்ப்புகளை தந்துள்ளது. இவரை விட வேற எந்த தெரிவும் தெரிவுக்குழுவினருக்கு இல்லை. மற்றைய துடுப்பாட்ட இடங்கள் சரியாக இருக்கின்றன. தினேஷ் சந்திமாலின் இடத்திற்கு டிக்வெல்ல விளையாடுவார். ஆனாலும் அணியில் இடம் பிடித்துள்ள அசேல குணரட்ன அந்த இடத்தில விளையாடுவது இலங்கை அணிக்கு பலமாக அமையும். மித வேகப்பந்து வீசும் சகலதுறை வீரர் இவர்.  மத்தியூஸ் இல்லாத நிலையில் சகலதுறை வீரர் அணிக்கு தேவை என்ற நிலையில் அசேல குணரட்ன விளையாடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அப்படி பார்த்தல் டிக்வெல்ல, தரங்க ஆகியோருக்கிடையில் ஒரு போட்டி நிலவலாம். 

பந்துவீச்சில் ரங்கன ஹேரத் , டில்ருவான் பெரேரா ஆகியோர் அணியில் நிச்சயம் விளையாடக் கூடியவர்கள். ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடுவதாக இருந்தால் ரங்கன ஹேரத் மட்டும் விளையாடுவார்.மூன்றாவது சுழற் பந்துவீச்சாளர் லக்ஷான் சன்டகான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.   வேகப்பந்து வீச்சாளர்களில் சுரங்க லக்மால் நிச்சயமானவர். அவுஸ்திரேலிய அணியுடன்  அறிமுகத்தை மேற்கொண்ட விஸ்வ பெர்னாண்டோ அணியால் நீக்கப்பட்டுள்ளார். 2 ஓவர்கள் பந்து வீசி 1 விக்கெட்டை கைபப்ற்றினார். பின்னர் இவருக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றினர். மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த தொடரில் அணியில் இல்லை. என்ன தெரிவு இதுவென புரியவில்லை. இந்த நிலையில் புதிய பந்துவீச்சாளர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். விஸ்வ பெர்னாண்டோ இடதுகர வேகப்பந்து வீச்சாளர். இது இன்னுமொரு பலம். ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் விளையாடியுள்ள லஹிரு கமகே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மைய முதற் தர போட்டிகளில் ஓரளவு சிறப்பாக பந்துவீசியுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளராக அணியில் இணைக்கப்பட்டுள்ள லஹிரு குமார அதிகம் பேசபப்டுபவராக உள்ளார். 19 வயதான கண்டியை சேர்ந்த இவர் அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட டெஸ்ட் போட்டிகளில்   மிக சிறப்பாக பந்துவீசியுளார். இங்கிலாந்து 19 வயதுக்குட்ப்பட்ட அணிக்கெதிராக 7 விக்கெட்டுகளையும்,  நான்கு விக்கெட்களையும் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளார். இதனை தொடர்ந்து இலங்கை A அணியில் இவர் இணைக்கப்பட்டார். ஆனால் 2 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை மாத்திரமே கைப்பற்றினார். ஆனாலும் இவர் மீது தெரிவுக்குழுவினர் நம்பிக்கை வைத்து தெரிவு செய்துள்ளனர். இவரின்  உடல்வாகும் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றால் போல் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. சிம்பாப்வே அணியுடன் இவருக்கு அறிமுகம் நிச்சசயம் வழங்கப்படும். சிறப்பாக செயற்பட்டால் அவருக்கு அணியில் வாய்ப்புகள் தொடரும். 19 வயதுக்குட்பட்ட ஒரு நாள் போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசியுள்ளமையினால் ஒரு நாள் தொடரிலும் கூட இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம்.

வேகப்பந்து வீச்சாளர்களில் கஸூன் மதுசங்கவும் அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் 86 முதற் தர இனிங்சில் 139 விக்கெட்டுகளை கைப்பற்றியுளார். 25 வயதான இலங்கை அணியின் தெரிவில் நம்பிககையை ஏற்படுத்தியுள்ள ஒருவர். சுரங்க லக்மாலுடன் இன்னுமிருவர் விளையாடும் வாய்ப்புகள் உள்ளனவென்றால் இவர்கள் இருவருக்கும் அறிமுகம் கிடைக்கும். அசேல குணரட்ன அணியில் இணைக்கப்பட்டால் இவர்களில் ஒருவர் மட்டும் விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கும்.

இலங்கை அணி  துடுப்பாட்டத்தில் சிறந்த நிலையை அடைந்து வருகின்றது. வேகப்பந்து வீச்சு மட்டுமே இலங்கை அணிக்கு பிரச்சினை தரும் விடயமாக இருந்துளளது. இந்த தொடரில் அதனை சீர்செய்த்துக்கொண்டாள் பலமான தென்னாபிரிக்கா அணியை அவர்கள் நாட்டில் நம்பிக்கையாக எதிர்கொள்ள முடியும்.

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையில் இதுவரையில் 15 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றுள் 10 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுளளது. 5 போட்டிகள் சமநிலையில் நிறைவைடைந்துள்ளன. இந்த 5 போட்டிகளைத்தான் கவனிக்க வேண்டும். சிம்பாப்வே தங்கள் நாட்டில் கொஞ்சம் பலமாகவே செயற்படுவார்கள். அண்மைக்காலங்களில் நியூசிலாந்து, தென்னாபிரிக்கா அணிகள் சிம்பாப்வே சென்ற வேளைகளில் சிம்பாப்வே அணி தோல்விகளையே சந்தித்தது.

 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியுடன் 1-1 என்ற தொடர் சமநிலை முடிவை 3 போட்டிகளால் பெற்றுக்கொண்டது. 1994ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் சென்ற முதற் தொடரில் மழை குறுக்கிட, சிம்பாப்வே அணி ஆதிக்கம் செலுத்தி தொடரை சமன் செய்தது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 1-0 என்ற வெற்றியை இலங்கை அணி பெற்றுக் கொண்டது. 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 2-0 என்ற வெற்றியினை இலங்கை அணி மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. எனவே கடந்த கால தொடர்களின் பாடங்களின் அடிப்படையில் இலங்கை அணி செயற்படவேண்டும்.

போட்டி அட்டவணை

முதற் போட்டி - ஒக்டோபர் 29 - நவம்பர் 02 - பிற்பகல் 1.00 மணி

ஹராரே விளையாட்டுக்கழக மைதானம்.

இரண்டாவது போட்டி - நவம்பர் 06  - நவம்பர் 10 - பிற்பகல் 1.00 மணி

ஹராரே விளையாட்டுக்கழக மைதானம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .